Friday 2 August 2013

போதிய நித்திரையின்மை என்பது புதிய பெற்ரோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாகும். போதிய நித்திரை பெறுவதற்க்கான சிறு துணுக்குகள்


 


அன்பால் இணைந்த கணவனுக்கும் மனைவிக்கும் புதிதாக ஒரு குழந்தை பிறந்தாலே ஆனந்தம் தான்.  ஆனாலும் புதிய குழந்தையின் வரவுடன், பெற்ரோரின் விசேடமாக அம்மாக்களின் நித்திரை பறிபோய்விடுகின்றது.  இது உண்மையிலேயே பெரியதொரு பிரச்சனைதான்.  பிறந்த குழந்தையை சரிவர வளர்ப்பதற்க்கு பெற்ரோருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் உள ஆரோக்கியமும் அவசியம்.  போதிய நித்திரையின்மை இது இரண்டையுமே பாதிக்கும்.  கீழேயுள்ள துணுக்குகள் புதிய பெற்ரோருக்கு ஓரளவாவது போதிய நித்திரை கிடைக்க உதவி செய்யும் என நம்புகின்றேன்.

1. முறை வைத்து பராமரித்தல்-  பிள்ளை பிறந்த ஆரம்ப நாட்களில் இரவு வேளைகளிலே பிள்ளை எழுந்தவுடன் பெற்ரோர் இருவருமே கண்விழித்து விடுகின்றார்கள்.  இதனால் இருவருக்குமே போதிய நித்திரை கிடைக்காமல் போய்விடுகின்றது.  இதை விடுத்து, முறையாகத் திட்டமிட்டு ஒருவர் நித்திரை செய்ய யாரவது ஒரு பெற்ரோர் மட்டும் கண்விழித்தல் பயனுள்ளதாகும். இதையே மாற்றி மாற்றி செய்வதால் இருவதுக்கும் போதிய நித்திரை கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.

2.  பிள்ளையுடன் சேர்ந்து நித்திரை செய்தல்- பிறந்த பிள்ளை ஒரு நாளில் பல தடவைகள் பகல் வேளைகளிலே நித்திரை செய்யும்.  இதில் ஏதாவது ஒரு முறை பிள்ளையுடன் சேர்ந்து நித்திரை செய்ய வேண்டும்.  இவ்விதம் பகல் நித்திரை செய்து எழுந்திருக்கும் போது மீதி நேரத்தில் பிள்ளையைப் பராமரிப்பதற்கும் ஏனைய வீட்டு வேலைகளைக் கவனிப்பதற்கும் போதிய உற்ச்சாகமும் சக்தியும் கிடைக்கும்.

3. பிறரிடம் உதவி நாடல்- வீட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு நித்திரை செய்யலாம்.  அனேகமான உறவினர்களும் நண்பர்களும் மனமுவந்து இந்த உதவியைச் செய்வார்கள்.
பிள்ளை பாதுகாப்பாக கண்காணிக்கப்படுகின்றது என்ற நம்பிக்கை வரும்போது போதிய திருப்தி ஏற்ப்படும் வரை பெற்றோர் முக்கியமாக தாய் நித்திரை செய்யலாம்.

4.  தாய் நித்திரை செய்வதற்க்கு முன்னர் பிள்ளைக்கு பால் அருந்தக் கொடுத்தல்- அனேகமாகப் பிள்ளைகள் இரவு வேளைகளிலே பசி காரணமாகத்தான் எழும்புகின்றன. பசி இல்லாமல் நிறைந்த வயிற்ருடன் படுக்கும் போது அவர்கள் தொடர்ச்சியாக நித்திரை செய்வார்கள்.  இதனால் அம்மாக்களும் இடையூறில்லாமல் யித்திரை செய்ய வாய்ப்பு இருக்கின்றது.

5.  தாய் நித்திரைக்குப் போவதற்க்கு முன் பிள்ளையின் diappar ஐ மாற்றுதல்

6.  ஒரு Babysitter ஐ நியமித்தல்- பொருளாதார வசதி இடம் கொடுக்கின்ற ப்ட்சத்தில் பகல் வேளைகளல் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களிற்க்கு ஒரு பராமரிப்பாளரை நியமிக்கலாம்.  இந்த வேளையில் தாய் போதிய நித்திரையை எடுத்துக் கொள்லலாம்.

புதிய அப்பாக்களுக்கு ஒரு வார்த்தை
புதிதாகக் குழந்தை பெற்ற உங்கள் மனைவி பிள்ளைப் பேற்ரின் போது அதிகளவு சக்தியை இழந்திருப்பார்.  உடற்பலவீனமான நிலையில் இருக்கும்போதே பிறந்த குழந்தையைப் பராமரிக்க வேண்டிய கடினமான புதிய பொறுப்பும் அவர்களுக்கு சேர்ந்துவிடுகின்றது.  நீங்கள் புரிந்துணர்வுடன் செயல்ப்பட வேண்டிய முக்கிய தருணம் இது. ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றி உங்கள் மனைவி போதிய அளவி நித்திரை செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. வணக்கம்...

    சிறப்பான பகிர்வு...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/3_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete